WhatsApp share:
பாரதி தமிழ்-தமிழ்
என்றே மூச்சு விட்டான்
இதோ தமிழைப்பற்றியும், தமிழ்
இனப்பற்றினைக் குறித்தும்
அவன் எழுதியவற்றில் ஒரு சில
துளிகள்.
"தமிழ், தமிழ், தமிழ் என்றும்,
எப்போதும்
தமிழை வளர்ப்பதே கடமையாகக்
கொள்க. ஆனால் புதிய-புதிய
செய்தி, புதிய-புதிய யோசனை,
புதிய-புதிய உண்மை, புதிய
புதிய இன்பம் தமிழில்
ஏறிக்கொண்டே போகவேண்டும்.
தமிழைவிட
மற்றொரு பாஷை சுகமாக
இருப்பதைப் பார்க்கும்
பொழுது எனக்கு வருத்தமுண்டாகிற
து. தமிழனைவிட
மற்றொரு ஜாதியான் அறிவிலும்,
வலிமையிலும் உயர்ந்திருப்பது
எனக்கு சம்மதமில்லை.
தமிழச்சியைக் காட்டிலும்
மற்றொரு ஜாதிக்காரி அழகாக
இருப்பதைக் கண்டால் என் மனம்
புண்படுகின்றது”.
"தமிழா பயப்படாதே ஊர்தோறும்
தமிழ்ப்பள்ளிக் கூடங்கள்
போட்டு ஐரோப்பிய
சாஸ்திரங்களை எல்லாம் தமிழில்
கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்"
தமிழன் உயரவேண்டும். தமிழ்
மொழி சிறப்புற வேண்டும்
என்று பாரதி விரும்பினார்.
அதையே உரக்கவும் சொன்னார்.
"காலா என் கண்முன்னே வாடா,
உன்னைக் காலால்
உதைக்கின்றேன்" என்று வீரம்
மொழிந்த தமிழன்
பாரதிக்கு பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...