Thalaiva BANNED in TN.

  • Thread starter sasitnj
  • Start date
  • Replies: Replies 65
  • Views: Views 11,402
people said:
thalaiva means - The Leader.
Here Tamil nadu politicians wont vijay become a thalaiva.
Rajini kanth generally called as thalaivar by his fans.

Got it bro. :k
 
தலைவா படத்தை தமிழக அரசு சார்பில் அதிகாரிகள் பார்க்கிறார்கள்!


சென்னை: தமிழக அரசு சார்பில் இன்று தலைவா படத்தை அதிகாரிகள் பார்க்கிறார்கள். சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குரிய காட்சிகள் இருந்தால் நீக்கும் வகையில் இந்த சிறப்புக் காட்சி அவர்களுக்கு காட்டப்படுகிறது. விஜய் நடித்துள்ள தலைவா திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததாலும், பாதுகாப்பு தரமுடியாது என போலீசார் சொன்னதாலும் இந்தப் படத்தைத் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுத்துவிட்டனர். நேற்று முதல் முன்பதிவும் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் படம் வெளியாவது குறித்து குழப்பமான சூழல் நிலவியது. இந்நிலையில் படத்தை தமிழக அரசின் உள்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்குத் திரையிட்டுக் காட்ட தயாரிப்பாளர் முன்வந்தார். இன்று பிற்பகல் நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம்ஸ் திரையரங்கில் இந்தக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரிவிலக்குப் பரிந்துரைப்புக் குழுவில் உள்ள இயக்குர் ஆர்வி உதயகுமார், பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஆகியோரும் அதிகாரிகளுடன் படம் பார்க்க வந்தனர். உளவுத் துறையைச் சேர்ந்த சிலரும் அரங்குக்கு வந்திருந்தனர். படம் முடிந்த பிறகு இந்தக் குழு பரிந்துரைக்கும் காட்சிகள், வசனங்களை நீக்க தயாரிப்பாளர் முன்வந்துள்ளார். அரசின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கவும் தயாராக இருப்பதால், படத்துக்கான முட்டுக்கட்டை விலகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/08/govt-officials-watch-thalaiva-movie-180797.html
 
Problems Sorted Out!

Movie Will Release Tomorrow As Announced Earlier!
 
தலைவா விவகாரம்! முதல்வரை சந்திக்க விஜய்க்கு அனுமதி மறுப்பு

தலைவா பட விவகாரம் தொடர்பாக கோடநாட்டில் முதல்வரை சந்திக்க சென்ற நடிகர் விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கியுள்ள இப்படத்தை மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் நாளை(ஆகஸ்ட் 9ம் தேதி) வெளியாக உள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னையில் தலைவா படம் வெளியாக உள்ள 9 பெரிய தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. படத்தை திரையிடக்கூடாது, மீறி திரையிட்டால் தியேட்டரில் வெடிகுண்டு வெடிக்கும் என ஒடுக்கப்பட்ட மாணவர் சமுதாயம் சார்பில் மரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுக்க தலைவா படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் தலைவா படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் படம் நாளை வெளியாவதில் பெரிய சிக்கல் நிலவுகிறது.

இதற்கிடையே நடிகர் விஜய் மற்றும் தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தலைவா படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாகவும், தியேட்டர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது தொடர்பாகவும் கோடநாட்டில் தங்கியுள்ள முதல்வரை சந்திக்க இன்று(ஆகஸ்ட் 8ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் மற்றும் சந்திரபிரகாஷ் திரும்பி வந்துவிட்டனர்.

அதேசமயம் படம் குறித்து விஜய் விடுத்துள்ள அறிக்கையில், "தலைவா படம், அரசியல் படமல்ல; துளிகூட அரசியல் கலக்காத சமூக படம். குடும்பத்தோடு அனைவரும் பார்க்கும் ஜனரஞ்சக படம். காதல், ஆக்ஷன், காமெடி என, அனைத்து அம்சங்களும் உண்டு. அரசியல் படம் என, யாரோ வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். இதை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். இதேபோல், படத்தின் இயக்குனர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
நாளை வெளியாகுமா தலைவா... தீராத குழப்பத்தில் தியேட்டர்கள்!


சென்னை: தலைவா படம் தமிழகத்தில் நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளன திரையரங்குகள். விஜய்யையும் அவர் தந்தையையும் முதல்வர் சந்திக்க மறுத்த தகவல் வெளியான பிறகு இந்தக் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. முன்பதிவு இல்லை இந்த நிமிடம் வரை படத்துக்கான முன் பதிவும் எந்தத் திரையரங்கிலும் நடக்கவில்லை. முன்னணி திரையரங்குகளான சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ் போன்றவை Coming Soon என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த தலைவா பட ஸ்லைடுகளையும் அகற்றிவிட்டன. தலைவா படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மும்பை மற்றும் உலகம் முழுவதிலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படும் என்று சந்திர பிரகாஷ் ஜெயின் கூறினார். நேற்று காலை தியேட்டர்களில் முன்பதிவு துவங்க இருந்த நிலையில்தான் திடீரென்று தலைவா படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் மாணவர் புரட்சிப்படை என்ற பெயரில் தியேட்டர்களுக்கு வந்த மர்ம கடிதத்தில் தலைவா படத்தை திரையிட்டால் உங்கள் தியேட்டரில் குண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போன் மூலமும் மிரட்டல்கள் வந்தன. இதையடுத்து டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் தலைவா படம் திட்டமிட்டபடி நாளை ரிலீசாகுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து விவாதிக்க தியேட்டர் அதிபர்கள் சங்கம் கூட்டம் நேற்று மாலை பிலிம்சேம்பரில் நடந்தது. சங்க தரைவர் அபிராமி ராமநாதன் தலைமை தாங்கினார். இதில் தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் பங்கேற்றனர். தயாரிப்பாளர்கள் அவசர கூட்டம் நள்ளிரவு வரை கூட்டம் காரசாராக நடந்தது. தலைவா படத்துக்கு மறு தணிக்கைக் குழு யு சான்றிதழ் அளித்துள்ளது. வரி விலக்கு குழுவினருக்கு படத்தை திரையிட்டு காட்டி வரி விலக்கு பெற்று தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் தரப்பில் வற்புறுத்தப்பட்டது. அதன்படி இன்று போர்பிரேம்ஸ் திரையரங்கில் அரசு அதிகாரிகளும் வரிவிலக்கு பரிந்துரைக் குழுவினரும் படம் பார்த்தனர். வரி விலக்குச் சான்றிதழ் நகல் அளிக்கப்பட்டால் மட்டுமே படத்தைத் திரையிட முடியும் என தியேட்டர் உரிமையாளர்கள் உறுதியாக உள்ளனர். இன்று இரவுக்குள் எப்படியும் வரி விலக்கு சான்றிதழ் கிடைத்துவிடும் என தயாரிப்பாளர் தரப்பில் உறுதி தரப்பட்டுள்ளது. இதற்கிடையில், விஜய்யையும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரையும் சந்திக்க மறுத்து முதல்வர் திருப்பியனுப்பிய செய்தி திரையரங்க உரிமையாளர்களை எந்த முடிவுக்கும் வரவிடாமல் செய்துள்ளது. இந்தப் படத்தின் பிரச்சினைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர்த்தவே முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்திக்க மறுத்துள்ளார். மற்றபடி நாளை படம் வெளியாவது உறுதி என இயக்குநர் விஜய் தரப்பில் கூறி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/08/no-clear-picture-on-thalaiva-release-180836.html
 
நாளைய, வருங்கால, எதிர்கால.... மூச்!- விஜய் ரசிகர் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுரை

சென்னை: தலைவா படம் வெளியாகும் போது ரசிகர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், எந்த மாதிரி வாசகங்களைத் தவிர்க்க வேண்டும், எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அகில இந்திய இளையதளபதி விஜய் தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விஜய்யை நாளைய, வருங்கால, எதிர்கால... போன்ற அரசியலைக் குறிப்பிடும் வார்த்தைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நாளைய, வருங்கால, எதிர்கால.... மூச்!- விஜய் ரசிகர் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுரை அப்படியே குறிப்பிட்டு பேனர்களை வைத்திருந்தால் அதை அகற்றும் உரிமை உங்களுக்கு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றம், பாராளுமன்றம், அரசியல் தலைவர்களின் படங்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளனர். என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தி விஜய்யைப் புகழ்ந்து போஸ்டர், பேனர் அடிக்க வேண்டும் என்ற இன்ஸ்ட்ரக்ஷனும் அதில் இடம்பெற்றுள்ளது. விஜய் ரசிகர் நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரம் இது! நாளைய, வருங்கால, எதிர்கால.... மூச்!- விஜய் ரசிகர் மன்றம் ரசிகர்களுக்கு அறிவுரை


Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/08/vijay-fan-clubs-instructions-fans-fans-during-thalaivaa-release-180846.html
 
fnu1xs.jpg
 
flash news :நிபந்தனைகளுடன் நாளை ரிலீசாகிறது தலைவா!
 
again flash news .
: தலைவா படம் நாளை ரிலீஸ் இல்லை... டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock