�சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் டிவியின் முதல் மாநாடு � சிறப்பம்சங்கள்...!!
சென்னையில் 3 ஆம் தேதி நடைபெற்ற �சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் டிவியின் முதல் மாநாடு, கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் - தலைவர் திரு.பா. கருணாநிதி அவர்களின் உரை...
கேபிள் டிவி தொழில் சந்திக்கின்ற பல பிரச்சினைகளில், இன்றைய தினத்தில், சென்னை கேபிள் ஆப்ரேட்டர்களின் இன்றைய தலையாய பிரச்சினையாக NON �ஆப்ரேட்டர் என்ற பிரச்சினை குறிப்பாக ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், சமூக விரோதிகளை துண்டிவிட்டு, கிட்டத்தட்ட 20 முதல் 24 ஆண்டுகாலமாக இந்த தொழிலை லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தொழில் நடத்தகூடிய நமக்கு இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக NON �ஆப்ரேட்டர்களுடைய பிரச்சினை சென்னை நகரத்திற்கு வந்துள்ளது.
எனவேதான் இந்த பிரச்சினையை சாதிக்கக் கூடிய வகையில், சென்னை நகரத்தில் இருக்க கூடிய ஆப்ரேட்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டபடியாகவும், அல்லது இயக்க ரீதியான ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவோ அல்லது பல்வேறு முயற்சியின் மூலமாகவோ எதிர்கொள்ளவேண்டியுள்ளது.... இதற்கு காரணம் அரசு கேபிள் ..!!. என குறிப்பிட்டவர்...
அரசு கேபிள் தரப்பில் பல முறை நேரில் சந்தித்து பேசுகையில்... அவர்கள் வெளிப்படையாகவே கூறிகின்றனர்.... ஆம், நாங்கள் தான் அதை (NON �ஆப்ரேட்டர் பிரிச்சினை) செய்கிறோம் என்று கூறுகின்றனர்...!!
இதன் காரணமாக இந்த பிரச்சினையை சந்திக்க கூடிய வகையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அடுத்தகட்ட நிகழ்ச்சியாக ...தற்போது முதல் மாநாட்டை நாம் கூட்டியுள்ளோம்....!! என தெரிவித்தவர் இதையொட்டி மாநாட்டின் சார்பாக அரசு கேபிள் டிவி சேர்மன் திரு. ராதா கிருஷ்ணன் அவர்களையும் அழைத்துள்ளோம் எனவும் கூறினார்.
மேலும் தமிழகத்தின் பிற பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆப்ரேட்டர்களுக்காக தொடர்ந்து பல்வேறு வகையில் இந்த தொழிலை பாதுகாப்பதற்கு, ஆப்ரேட்டர்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்திருக்க கூடிய பல சங்கங்களின் தலைவர்களையும் அழைத்துள்ளோம்...!! எனவும் தெரிவித்தவர், மாநாட்டிற்கு வந்திருந்த சங்க தலைவர்களை வரவேற்று அறிமுகம் செய்தார்.
இது போன்ற பல பிரச்சினைகள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் நாம் சந்தித்த தலைவர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் வாயிலாகவும் பல தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது...!! என்ற தகவலையும் கூறினார்.
சென்னையை பொறுத்த அளவில், கேபிள் துறைக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத வகையில் சில சமூக விரோதிகளை பயன்படுத்தி கொண்டு, கேபிள் டிவி தொழிலில் NON �ஆப்ரேட்டர்களை உருவாக்குவது என்ற பிரச்சினை,தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது... !! எனக் கூறியவர்,
இதற்கு எதிராக சட்டபடியாகவும், பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் முன்னெடுத்து செல்லும் அதே வேளையில், அரசு கேபிள் டிவியுடன் பேச்சுவார்த்தை செய்ய வேண்டியுள்ளது...!! எனத் தெரிவித்தவர்... இந்த இரண்டு மாதகாலத்தில் நாம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வேளையில், ஆளும்கட்சியை சேர்ந்த முக்கியமான நபர்கள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் உள்பட பலர், இது போன்ற காரியத்தில் ஈடுபடுகின்றனர், என கூறினார்...!!
அரசு கேபிள் டிவி தலைவர் அவர்களை இது குறித்து சந்தித்து பேசுகையில்... அவருக்கு இது போன்ற நிர்பந்தங்கள் பரிந்துரை அழுத்தங்கள் தொடர்ந்து வருகிறது என அவர் வெளிப்படையாகவே கூறுவதாக தெரிவித்தவர்...மேலும் அவருக்கு வந்த கடிதங்களை முதற்கொண்டு எடுத்து காட்டும் சூழ்நிலை தான் தற்போது அரசு கேபிள் டிவி மூலமாக சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது..!!
மேலும் கடிதங்களை அனுப்பும் ஆளும்கட்சியை சேர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள்... இன்னாருக்கு, இந்த பகுதிக்கு அரசு கேபிள் இணைப்பு கொடுக்கவும் என வெளிப்படையாகவே குறிப்பிட்டு பரிந்துரை கடிதங்களை கொடுத்துள்ளனர்...!! என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்...
கடந்த 5 மாதகாலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சினை குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசாத நிலையில் தான் ... நாம் களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர்...
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்... என நடத்திய உடன்... அரசு கேபிள் டிவி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுகையில் முதல்வர் அவர்களுக்கு தெரியாமலே இது போன்ற காரியங்கள் நடந்து வருவதாக தமக்கு திட்டவட்டமான செய்திகள் வருவதாகவும் தெரிவித்தார்..
மேலும் போஸ்ட் ஆபிஸ் நிலையங்களில் இணைப்பு இல்லாதவர்களுக்கு... முறையில்லாமல் லைசென்ஸ் கொடுத்து வருகின்றனர்....எனவும் தெரித்தவர்...
இது போன்றவற்றை முறைபடுத்த வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது எனக் கூறியவர்... தபால் அலுவலகங்களுக்கு முன் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் எனவும் தெரிவித்தார். கேபிள் தொழிலில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகளில் இருந்து தொழிலையும் ஆப்ரேட்டர்களையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆப்ரேட்டர்கள் எந்த விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத மாச்சரியங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து ஒதுக்கி ஒன்றிணையவேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள ஆப்ரேட்டர்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என வலியுறுத்தி கூறினார்.
.இறுதியாக... தற்போது உள்ள ஒருங்கிணைப்பு குழுவை... ஒரு சங்கமாக மாற்றும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும் கூறினார்.
புதிதாக பதிவு செய்யபடும் சங்கம்.... சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யபடும் எனவும்... இது டிரஸ்ட் சட்டத்தின் கீழ் இல்லாமல் தொழிற்சங்க சட்ட அமைப்பின் கீழ் வரும் வகையில் இருக்கும் எனவும் தெரித்தார். .
முன்னாதாக TnTelevision இணையதளத்திற்கு அளித்த பேட்டியில்... ஏற்கனவே உள்ள சங்கங்களும், தற்போதைய புதிய சங்கமும் எங்கே முரண்படுகிறீர்கள் எனக் கேட்டதற்கு....
ஏற்கனவே உள்ள சங்கங்கள், கார்பரேட் MSO நிறுவனங்களாக மாற்றப்பட்டிருப்பதால்.... அவர்களால் ஒரு அளவிற்கு மேல் களத்தில் நின்று போராட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அது போன்ற ஒரு நிலை எங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் மேலும் எந்த ஒரு MSOவிடம் இருந்தும் சேனல்களிடம் இருந்தும் அன்பளிப்பு நன்கொடை போன்றவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம் எனத்தெரிவித்தார். .
புதிய சங்கத்தின் மூலம் தற்போது ஆப்ரேட்டர்களுக்கு எந்த மாதிரியான கிடைக்கும்...? எனக் கேட்டதற்கு
சென்னையில் இன்றை நிலையில் அனலாகை விடவும் முடியாமல், டிஜிட்டலை ஏற்கவும் முடியாத ஒரு நிலைதான் நிலவுகிறது... எனவே அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் சாதகமான பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க கூடிய தீர்வை எட்டவேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை எனவும் தெரிவித்தார்.